ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 36 ஆம் நிகழ்வான மூன்றாம் ஆண்டு நிறைவு விழா கருத்தரங்கம் மற்றும் மாவீரர் நெல்சன் மண்டேலா படத்திறப்பு விழா நடைபெற்றது .
நிகழ்ச்சிக்கு முன்னதாக தமிழ்ச் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திய குறும்படங்கள் திற ,மீசை ,செம்மொழி ,தமிழ் இனி ஆகியவை ஒளிபரப்ப பட்டன .இந் நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட செயலர் பழ.பிரபு வரவேற்புரையாற்றினார் . வாசகர் வட்ட அமைப்பாளரும் திராவிடர் கழக மண்டல செயலாளருமான பழ .வெங்கடாசலம் தொடக்க உரையாற்றினார்
இந் நிகழ்ச்சிக்கு பெரியார் மருத்துவ அணியின் மாநில செயலர் பழ.ஜெகன்பாபு தலைமை வகித்து உரையாற்றினார் .விடுதலைசிறுத்தைகளின் ஊற்றங்கரை ஒன்றிய செயலாளர் நாசி.சரவணன் , சி.பி.எம் வட்ட செயலர் கே .மகாலிங்கம் திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாவட்ட அமைப்பாளரும் வாசகர் வட்ட தலைவருமான தணிகை ஜி கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்
மாவீரர் நெல்சன்மண்டேலா படத்தினை திறந்து வைத்து வேலூர் பகுத்தறிவாளர் பேரவையின் செயலரும் நீலா குழுமத்தின் நிறுவனருமான பன்னீர்செல்வம் புகழுரை ஆற்றினார்
. .வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு மேனாள் மருத்துவ இணை இயக்குனர் வே.தேவராசன் , புலவர் அண்ணாமலை .குமார் ,பழ .பிரபு ,கவிஞர் .சுப்புலட்சுமி ஆகியோர் நூல்களை அளித்து சிறப்பு செய்தனர்
கவிஞர் சாகுல் அமீத் சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுக உரையை ஆற்றினார் . ''தமிழும் திராவிடமும் ''என்னும் தலைப்பில் எழுத்தாளர் மார்க்ஸ் அவர்கள் உரையாற்றி. பார்வையாளர்கள் பல கேள்விகளுக்கு மிகச் சிறப்பான பதில் அளித்தார்
நிறைவாக வாசகர் வட்ட துணை செயலர் ஆடிட்டர் .ராஜேந்திரன் நன்றி உரையாற்றினார் .நிகழ்ச்சியினை மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா .சரவணன் தொகுத்து வழங்கினார்
அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட், ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்