விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Tuesday, 27 November 2018

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 85 ஆம் மாத நிகழ்வு













ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 85 ஆம் மாத நிகழ்வாக வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழாய்வுத்துறை மற்றும் நாட்டுநலப் பணி திட்டம் இணைந்து மேனாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவை இளைஞர் எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது

இவ் விழாவிற்கு கல்லூரியின் செயலர் ஆர் .பி இராசு தலைமை தாங்கினார் முன்னதாக ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டமும் வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து தயாரித்த கவிப்பேரரசு எழுதிய அப்துல் கலாம் குறித்த பாடல் திரையிடப்பட்டது தமிழ்த்துறை தலைவர் முனைவர் .க .இராஜா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்  

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட துணை செயலர் நல்லாசிரியர் சித.வீரமணி விழா அறிமுக உரையாற்றினார் விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை .ஜி.கருணாநிதி துணைத்தலைவர் மருத்துவர் வெ.தேவராசு ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர் .நிகழ்வின் முதல் அமர்வை துவக்கி வைத்து கல்லூரியின் முதல்வர் முனைவர் .க .அருள் அவர்கள் வாழ்த்துரையாற்றினார்

  தென்அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச வலுதூக்கும் போட்டியில் நான்காம் இடமும் ,தனிப்பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை புரிந்த வலு தூக்கும் வீராங்கனை அக்கியம்பட்டி .கமலி நிகழ்வில் பாராட்டப்பட்டார்
மேனாள் மேலவை உறுப்பினரும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்நிருவனத்தலைவருமான  .செ.முத்துசாமி அவர்கள் பாரட்டுரையற்றினார் . வலு தூக்கும் வீராங்கனை அக்கியம்பட்டி .கமலி ஏற்புரை நிகழ்த்தினார்
முதல் அமர்வின் நிறைவாக திராவிடர் மாணவர் கழக மாநில செயலர் .ச.பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார் அவர்கள் “இது வாலிப வயசு என்னும் தலைப்பில் இளைஞர்களை கவரும் வகையில் மிகச் சிறப்பான உரையை நிகழ்த்தினார்

பிற்பகல் 2.௦௦ மணியளவில் இரண்டாம் அமர்வு துவங்கியது
சுடர் மனநல ஆலோசனை மய்யம் சார்பில் இளைஞர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி இலக்கை நோக்கி” (power point presentation ) என்னும் தலைப்பில் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட செயலரும் உளவியலாளருமான பழ.பிரபு உரையாற்றினார் .மாணவ மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து தமது உரையை பலத்த கரவொலியோடு நிறைவு செய்தார் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ச.பார்த்திபன் நன்றியுரையாற்ற நாட்டுபண் இசைக்க விழா நிறைவு பெற்றது

குளிரூட்டப்பட்ட கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற இவ் விழாவில் 5௦௦ க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர் .தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகளை கல்லூரியில் நடத்திட வேண்டும் என்று ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்

Wednesday, 28 February 2018

51A (h) மற்றும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தேசிய அறிவியல் தின விழா






















51A (h) என்னும் அறிவியல் மனப்பான்மையை மக்களிடம் ஏற்படுத்தும் பொது அமைப்பும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டமும் இணைந்து தேசிய அறிவியல் தின விழா ஊற்றங்கரை சிவா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெகு சிறப்புடன் கொண்டாடப் பட்டது
இந் நிகழ்ச்சிக்கு சிவா மெட்ரிக்குலேசன் பள்ளியின் நிறுவனர் முத்து .செல்வராசன் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார் ,பள்ளியின் முதல்வர் ஜோதி செல்வராசன் அவர்களும் விடுதலை வாசகர் வட்ட துணைத்தலைவர் இரா.வேங்கடம் அவர்களும் ,சீரிய பகுத்தறிவாளரும் கஞ்சனூர் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சித .வீரமணி அவர்களும் ,சிவா மெட்ரிக்குலேஷன் பள்ளியின் துணைத்தலைவர் எஸ்.மாலதி அவர்களும் முன்னிலை வகித்து உரையாற்றினர்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 51-A(H) யில் கூறியுள்ளபடி அறிவியல் உணர்வைமனித மதிப்புகளைகேள்வி கேட்கும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். என்கிற அடிப்படையில் 51A (h) அமைப்பு துவங்கப்பட்டுள்ளது என்றும்
மக்களின் மத்தியில் நிலவும் பல்வேறு விதமான மூட நம்பிக்கைகள் குறித்து அறிவியல் விளக்கங்களுடன் மேனாள் இணை இயக்குனர் மருத்துவர்.வெ தேவராசு விளக்கமாக கூறி உரையாற்றினார்
சிவா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கும் ஏழாம் வகுப்பு மாணவர் கதிரவன் கிராமப்புற சூழ்நிலையில் கல்வி கற்றாலும் பார்வையற்றோர் பிறர் உதவியின்றி சென்சார் கருவி கொண்டு நடக்க கருவி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை வருகை தந்த பெருமக்கள் பாராட்டி மகிழ்ந்தனர் ,வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கி சிறப்பிக்கப் பட்டது
நிறைவாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலர் முனைவர் .எஸ்.ஆர் சேதுராமன் மந்திரமா தந்திரமா நிகழ்வினை பள்ளி மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் வெகு சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தினார் .பள்ளியின் சார்பில் 51A (h) அமைப்பிற்கும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது .தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் பள்ளியில் அறிவியல் நிகழ்வு நடத்திட வேண்டுகோள் விடுக்கப்பட்டது