விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Monday, 17 October 2011

பெண்ணியல் கருத்தரங்கம் மற்றும் முனைவர் .க. அருள் அவர்களுக்கு பாராட்டு விழா



       ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில்
                             பெண்ணியல் கருத்தரங்கம்
                                                     மற்றும்
                                                                            ஸ்ரீ வித்யா  மந்திர்   கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்  முதல்வர்
                                                                                          முனைவர்  .க. அருள் அவர்களுக்கு பாராட்டு விழா
***************************************************************************************************************************************************************
                             அன்புடன் அழைக்கிறோம் !
  ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் பெண்ணியல் கருத்தரங்கமும் ,ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் .க,அருள் அவர்களுக்கு பாராட்டு விழாவும் வரும் அக்டோபர் திங்கள் 23 ஆம் நாள் ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில்   ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடைபெறுகிறது

இவ் விழாவிற்கு மானமிகு.ம.வித்யா அவர்கள்   வரவேற்புரையாற்றுகிறார்.விடுதலை வாசகர் வட்டத்தின் துணைத் தலைவர் இர.வேங்கடம் மாத அறிக்கை வாசிக்கிறார் . திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி தலைவரும் ,திராவிடர் கழக மகளிரணி பொருளாளருமான மானமிகு.எ .அகிலா எழிலரசன் இக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்குகிறார்  ,திராவிடர் கழக மகளிரணி பொறுப்பாளரும் மாதம்பதி தலைமை ஆசிரியருமான மானமிகு .மு.இந்திராகாந்தி அவர்கள் விழா அறிமுக உரை ஆற்றுகின்றார்

ஊற்றங்கரை காவல் ஆய்வாளர் எம்.சிவலிங்கம் அவர்களும் ,உடற் கல்வி ஆசிரியரும் பெரியார் வீர விளையாட்டுக் கழக செயற் குழு உருபினருமான  அழகு மணி அவர்களும் ,விடுதலை வாசகர் வட்ட தலைவரும் மாவட்ட திமுக இலக்கிய அணி செயலாளருமான தணிகை .ஜி.கருணாநிதி அவர்களும் முன்னிலை வகிக்கின்றனர் 
 ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார்.இம் மாதம்  ஸ்ரீ வித்யமந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்  முதல்வர்.க.அருள் அவர்கள் கல்வி மற்றும் சமுக பணிகளுக்காக பாராட்ட படுகிறார்.மாவட்ட திராவிடர் கழக தலைவர் கே.சி எழிலரசன் பாராட்டுரை நிகழ்த்துகின்றார் மாவட்ட மகளிரணி செயலாளர் மானமிகு .ம.கவிதா அவர்கள் வடலூர் வள்ளலார் பிறந்த நாளினை ஒட்டி வள்ளலார்  படத்தினை திறந்து வைத்து உரையாற்றுகிறார்

''பெரியாரும் பெண் விடுதலையும் ''என்னும் தலைப்பில் பெரியார் பல்கலை கழகத்தின் பதிவாளரும் தமிழ் துறை தலைவருமான முனைவர் பெ.மாதையன் கருத்துரையாற்றுகின்றார்

விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ .பிரபு தொகுத்து வழங்குகின்றார்.மானமிகு முருகம்மாள் நன்றி உரையாற்றுகின்றார்
அனைவரும் வருக !

No comments:

Post a Comment