விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Friday, 17 March 2017

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நடத்திய பேலியோ (ஆதிமனிதன் உணவுமுறை ) விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 75 ஆம் மாத நிகழ்வாக ஊற்றங்கரை பேலியோ கட்செவி குழுவுடன் இணைந்து பேலியோ (ஆதிமனிதன் உணவுமுறை )விழிப்புணர்வு கருத்தரங்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 1௦ மணியளவில் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது

வாசகர் வட்ட துணை செயலர் சித .வீரமணி விழாவினை ஒருங்கிணைத்தார் 

அறிவாசான் தந்தைபெரியார் அவர்கள் 03/02/1964 அன்றைய விடுதலையில் நாம் சக்திகுறைந்தவர்களாகவும் ,மனஉறுதியற்றவர்களாகவும்,சோம்பேறிகளாகவும் இருக்கக் காரணம் நமது அரிசி உணவு தான் ,அரிசி மனிதனை சாகாமல் வைத்திருக்குமே ஒழிய வலிவு உடையவனாக இருக்க உதவாது ,அதில் சத்து இருக்காது .மற்ற காய்கறிகளிலும் அவ்வளவாகச் சத்து அதிகம் இராது ,அரிசியும் காய்கறியும் சோம்பேறியாக ஊரார் உழைப்பை உண்டு வாழக் கூடியவர்களுக்கு வேண்டுமானால் பொருந்துமே ஒழிய உழைப்பாளிகளுக்கு ஏற்றதல்ல என்று கூறிய படி அண்மைக்காலாமாக தமிழ்நாட்டில் வளர்த்து வரும் உணவுமுறை தான் பேலியோ (ஆதிமனிதன் உணவுமுறை ).விடுதலை வாசகர் வட்டத்தின் மருத்துவ அறிவியல் சார்ந்த மாத நிகழ்வாக பேலியோ (ஆதிமனிதன் உணவுமுறை )விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது


நிகழ்வின் தொடக்கமாக காலை 9 மணியளவில் தமிழர்களுக்கு பேலியோ உணவு முறையை அறிமுகப்படுத்திய ஆரோக்கியம் நலவாழ்வு முகநூல் குழுவின் தலைவரும் அமெரிக்க வாழ் தமிழருமான நியாண்டர் செல்வன் அவர்கள்திருப்பூர் பேலியோ கூட்டத்தில் ஆற்றிய உரையின் காணொளி ஒளிபரப்பப்பட்டது .இந் நிகழ்விற்கு ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்

பழ.பிரபு விழா அறிமுக உரை 
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட செயலர் பழ.பிரபு விழா குறித்தும் தமது பேலியோ அனுபவங்கள் குறித்தும் விழா அறிமுக உரையாற்றினார்

  விடுதலை வாசகர் வட்ட தலைவரும் பேலியோ கட்செவி குழுவின் ஒருங்கிணைப்பாளருமான தணிகை ஜி கருணாநிதி அவர்கள் விழாவிற்கு தலைமை வகித்து தமது பேலியோ அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் .இந் நிகழ்விற்கு ARS பெட்ரோலியம் ஏஜென்சீஸ் உரிமையாளர் இராஜி அவர்களும் ,அரிமா சங்கத்தின் மாவட்ட பொருளாளர் நா .பா.செந்தில்குமார் அவர்களும் ,திருமகள் அக்ரோ நிறுவன பொறுப்பாளர் சிவா அவர்களும் முன்னிலை வகித்து உணவு முறை குறித்த தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.









பேலியோ  உணவு முறையை அறிமுகப்படுத்திய ஆரோக்கியம் நலவாழ்வு முகநூல் குழுவின் தலைவரும் அமெரிக்க வாழ் தமிழருமான நியாண்டர் செல்வன் அவர்கள் விழாவினை வாழ்த்தி அமெரிக்காவில் இருந்து அனுப்பிய காணொளி ஒளிபரப்பப்பட்டது.உணவு முறை தொடங்குவதற்கு முன்பு எடுக்க வேண்டிய இரத்த பரிசோதனைகள் குறித்து தைரோகேர் நிறுவனத்தின் சார்பில் ரூபேஷ் குமார் அவர்கள் விளக்கினார்









பேலியோ(ஆதிமனிதன் உணவுமுறை ) குறித்த தமது அனுபவங்களையும் ,இம் உணவுமுறை தந்தை பெரியார் அவர்கள் கூறிய வாழ்வியலோடு எவ்வாறு பொருந்துகிறது என்பதையும் மேட்டூர் தோழர் முல்லைவேந்தன் விளக்கி தமது அனுபவ உரையை சுவைபட பகிர்ந்து கொண்டார்
.வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நூல்களை அளித்து சிறப்பு செய்யப்பட்டது

















ஆரோக்கியம் நலவாழ்வு முகநூல் குழுமத்தின் தன்னார்வலர்களில் ஒருவரும் சீரிய பெரியாரிய செயல்பாட்டாளருமான வி.சி .வில்வம் அவர்கள் பேலியோ உணவு முறை குறித்தும் ,உடலில் ஏற்படும் பல்வேறு நோய்கள் இவ் உணவு முறையால் தீர்க்கப்படுகிறது என்பதையும் பவர் பாயின்ட் மூலம் வெகு சிறப்பாக விளக்கி தமது கருத்துரை ஆற்றினார்  






நிறைவாக பெரியார் மருத்துவ குழுவின் மாநில செயலரும் ,விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியின் இணை பேராசிரியருமான மருத்துவர் .பழ.ஜெகன்பாபு அவர்கள் பொதுமக்களின் பேலியோ தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு மருத்துவ அறிவியல் ரீதியாக விளக்கமளித்தார் .விடுதலை வாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் செ.சிவராஜ் அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவுபெற்றது  .விழாவினை மிகச் சிறப்பாக விடுதலை வாசகர் வட்ட துணை செயலாளரும் தலைமை ஆசிரியருமான சித .வீரமணி அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார் விழாவில்  பங்கேற்ற அனைவருக்கும் கொய்யா காய் ,பேலியோ பரிந்துரைக்கும் உணவுகளில் ஒன்றான முட்டையும் மதிய உணவாக வழங்கப்பட்டது .இது போன்ற மருத்துவம் சார்ந்த 
நிகழ்வுகளை விடுதலை வாசகர் வட்டம் தொடர்ந்து நடத்திட வேண்டுமென கலந்து கொண்ட பலரும் வேண்டுகோள் விடுத்தனர் 

Thursday, 16 March 2017

நியாண்டர் செல்வன் அவர்களின் வாழ்த்துரை

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நடத்திய பேலியோவிழிப்புணர்வு கருத்தரங்கில் பேலியோ உணவு முறையை அறிமுகப்படுத்திய ஆரோக்கியம் நலவாழ்வு முகநூல் குழுவின் தலைவரும் அமெரிக்க வாழ் தமிழருமான நியாண்டர் செல்வன் அவர்கள் விழாவினை வாழ்த்தி அமெரிக்காவில் இருந்து அனுப்பிய காணொளி

எம்.ஜி,ஆர் நூற்றாண்டு விழா வீடியோ


ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 75 ஆம் மாத நிகழ்வு












Wednesday, 15 March 2017

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டமும் போச்சம்பள்ளி விநாயகா பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து நடத்திய மகளிர் தின விழா
























ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 74 ஆம் மாத நிகழ்வாக போச்சம்பள்ளி விநாயகா பாலிடெக்னிக் கல்லூரியுடன் இணைந்து மகளிர் தின விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது இந் நிகழ்வில் போச்சம்பள்ளியை சுற்றியுள்ள கிராமப்புற அரசு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்
விநாயகா பாலிடெக்னிக் கல்லூரியின் கலையரங்கத்தில் மாணவிகள் அனைவரும் வரவேற்கப்பட்டு எலுமிச்சை சாறு அளித்து அமரவைக்கப்பட்டனர் .நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது விநாயகா பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனர் சீரிய பகுத்தறிவாளர் கே.ஏ.அரங்கநாதன் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்
திராவிடர் மகளிர் பாசறையின் பொறுப்பாளரும் நல்லாசிரியர் விருது பெற்றவருமான மாதம்பதி அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் .மு.இந்திராகாந்தி அவர்கள் முன்னிலை வகித்து உரையாற்றினார்
இயக்குனர் கீதா இளங்கோவன் அவர்கள் இயக்கத்தில் வெளியான ‘’மாதவிடாய் ‘”ஆவணப்படம் திரையிடப்பட்டது .மாணவிகள் பலரும் ஆர்வத்துடன் ஆவணப்படத்தை பார்த்தனர் .ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுக்கு பிறகு கோவை மைன்ட் கேர் மனநல மையத்தின் மனநல ஆலோசகர் திருமதி .எழில் அவர்கள் மகளிர் தின கருத்துரையாற்றினார் அவரது கருத்துரைக்கு பின்னர் மாணவிகள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு கேள்விகளை கேட்டு அறிவு தெளிவு பெற்றனர் .நிகழ்ச்சியின் நிறைவாக ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் செயலர் பழ.பிரபு நன்றியுரையாற்றினார்
கல்லூரியின் சார்பில் பங்குபெற்ற அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு பேருந்தின் மூலம் அவரவர் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .கல்லூரி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மதிய உணவு இடைவெளிக்கு பின்னர் கல்லூரி மாணவர்,மாணவிகளுக்கு தனியாக கருத்தரங்கம் நடத்தப்பட்டது .மனநல ஆலோசகர் திருமதி எழில் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் மாணவ சமுதாயம் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்துக்கூறி பகுத்தறிவு வழியில் எப்படி சாதனை மனிதர்களாக மாறுவது என்பதை மிகுந்த எடுத்துக்காட்டுக்களுடன் உரையாற்றினர் .பின்னர் மாணவ மாணவிகள் பங்குபெற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது .நிறைவாக கல்லூரியின் நிர்வாக செயலர் திருமதி சுடலை லட்சுமி நன்றியுரையாற்றினார்
இன் நிகவில் கல்லூரியின் தாளாளர் இராஜா அண்ணாமலை ,கல்லூரியின் செயலர் திருமதி பேபி மனோகரி ,ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட துணைத்தலைவர் இரா.வேங்கடம் ,பொருளாளர் அண்ணா .அப்பாசாமி,ஒன்றிய திராவிடர் கழக மகளிரணி பொறுப்பாளர் வித்யா ,மாதேஸ்வரன் கல்லூரியின் பேராசிரிய பெருமக்கள் ,அரசு பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .தொடர்ச்சியாக இது போன்ற நிகழ்வை விடுதலை வாசகர் வட்டம் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்