விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Wednesday, 15 March 2017

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டமும் போச்சம்பள்ளி விநாயகா பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து நடத்திய மகளிர் தின விழா
























ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 74 ஆம் மாத நிகழ்வாக போச்சம்பள்ளி விநாயகா பாலிடெக்னிக் கல்லூரியுடன் இணைந்து மகளிர் தின விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது இந் நிகழ்வில் போச்சம்பள்ளியை சுற்றியுள்ள கிராமப்புற அரசு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்
விநாயகா பாலிடெக்னிக் கல்லூரியின் கலையரங்கத்தில் மாணவிகள் அனைவரும் வரவேற்கப்பட்டு எலுமிச்சை சாறு அளித்து அமரவைக்கப்பட்டனர் .நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது விநாயகா பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனர் சீரிய பகுத்தறிவாளர் கே.ஏ.அரங்கநாதன் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்
திராவிடர் மகளிர் பாசறையின் பொறுப்பாளரும் நல்லாசிரியர் விருது பெற்றவருமான மாதம்பதி அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் .மு.இந்திராகாந்தி அவர்கள் முன்னிலை வகித்து உரையாற்றினார்
இயக்குனர் கீதா இளங்கோவன் அவர்கள் இயக்கத்தில் வெளியான ‘’மாதவிடாய் ‘”ஆவணப்படம் திரையிடப்பட்டது .மாணவிகள் பலரும் ஆர்வத்துடன் ஆவணப்படத்தை பார்த்தனர் .ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுக்கு பிறகு கோவை மைன்ட் கேர் மனநல மையத்தின் மனநல ஆலோசகர் திருமதி .எழில் அவர்கள் மகளிர் தின கருத்துரையாற்றினார் அவரது கருத்துரைக்கு பின்னர் மாணவிகள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு கேள்விகளை கேட்டு அறிவு தெளிவு பெற்றனர் .நிகழ்ச்சியின் நிறைவாக ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் செயலர் பழ.பிரபு நன்றியுரையாற்றினார்
கல்லூரியின் சார்பில் பங்குபெற்ற அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு பேருந்தின் மூலம் அவரவர் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் .கல்லூரி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மதிய உணவு இடைவெளிக்கு பின்னர் கல்லூரி மாணவர்,மாணவிகளுக்கு தனியாக கருத்தரங்கம் நடத்தப்பட்டது .மனநல ஆலோசகர் திருமதி எழில் அவர்கள் இன்றைய காலகட்டத்தில் மாணவ சமுதாயம் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்துக்கூறி பகுத்தறிவு வழியில் எப்படி சாதனை மனிதர்களாக மாறுவது என்பதை மிகுந்த எடுத்துக்காட்டுக்களுடன் உரையாற்றினர் .பின்னர் மாணவ மாணவிகள் பங்குபெற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது .நிறைவாக கல்லூரியின் நிர்வாக செயலர் திருமதி சுடலை லட்சுமி நன்றியுரையாற்றினார்
இன் நிகவில் கல்லூரியின் தாளாளர் இராஜா அண்ணாமலை ,கல்லூரியின் செயலர் திருமதி பேபி மனோகரி ,ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட துணைத்தலைவர் இரா.வேங்கடம் ,பொருளாளர் அண்ணா .அப்பாசாமி,ஒன்றிய திராவிடர் கழக மகளிரணி பொறுப்பாளர் வித்யா ,மாதேஸ்வரன் கல்லூரியின் பேராசிரிய பெருமக்கள் ,அரசு பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .தொடர்ச்சியாக இது போன்ற நிகழ்வை விடுதலை வாசகர் வட்டம் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்

No comments:

Post a Comment