விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Friday, 20 May 2022

உங்களுக்குள் ஓர் இலக்கியவாதி - எழுத்தாளர் ஆதவன் தீட்சன்யா


 

ஒவ்வொருவரையும் எழுதத் தூண்டும் உரை - எழுத்தாளர் ஆதவன் தீட்சன்யாவின் இலக்கிய உரை

 

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் மே மாத கூட்டம் முற்போக்கு தமிழ் இலக்கிய கருத்தரங்கம் மற்றும் கார்ல் மார்க்ஸ் 203 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவாக  மே மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  காலை 10 மணியளவில் வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் மிக சிறப்புடன் நடைபெற்றது

மே மாத ஒளிப்படங்கள் காண இங்கு கிளிக் செய்யவும் 




தொடக்கமாக ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழகத்தலைவர் செ.பொன்முடி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார் தொடர்ந்து விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளர் ஆடிட்டர் ந.இராசேந்திரன் மாத அறிக்கையை வாசித்தார்

 

ஊற்றங்கரை த.மு.எ.க.ச செயற்குழு உறுப்பினர் இரா.லெனின் ,தருமபுரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணியின் மாவட்ட பொறுப்பாளர் இரா.கிருஷ்ணமூர்த்தி ,விடுதலை வாசகர் வட்ட செயலர் பழ.பிரபு   ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்

 

விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் தணிகை.ஜி.கருணாநிதி தலைமை வகித்து தலைமை உரையாற்றி உறுப்பினர் மற்றும் புரவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்

 

இந் நிகழ்வில் எழுத்தாளர் கரிசல் குயில் கி.ராஜநாராயணன் படத்தினை

ஆசிரியர் நா.இராமமூர்த்தி திறந்து வைத்து அவர் குறித்து புகழுரையாற்றினார் .

 

உங்களுக்குள் ஓர் இலக்கியவாதி என்கிற தலைப்பில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா மிக சிறப்பான உரையை நிகழ்த்தினார்

 

 மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி துணை செயலர் அழகி.இராஜேசன்  நிகழ்வை ஒருங்கிணைத்தார் நிறைவாக திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் செ.சிவராஜ்  நன்றியுரையாற்ற நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

 

வருகை தந்த அனைவருக்கும் தேநீர் ,பிஸ்கட் , மதிய உணவு வழ்ங்கப்பட்டது. இது போன்ற சிந்தனைக்கு விருந்தளிக்கும் நிகழ்வுகளை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்

https://photos.app.goo.gl/9qzdvvGN2s9T3ELa7

மே -2022 மாத கூட்ட அழைப்பிதழ் - முற்போக்கு தமிழ் இலக்கிய கருத்தரங்கம் கார்ல் மார்க்ஸ் 203 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா


 









முனைவர் டேவிட்சன் - செந்தமிழின் நந்தவனம்


 

Thursday, 5 May 2022

தமிழர் கலை பண்பாட்டு புரட்சி நாள் விழா

 

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் ஏப்ரல் மாத கூட்டம் தமிழர் கலை பண்பாட்டு புரட்சி நாள் விழாவாக ஏப்ரல் 30 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் மிக சிறப்புடன் நடைபெற்றது

தொடக்கமாக விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளர் ஆடிட்டர் ந.இராசேந்திரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். விடுதலை வாசகர் வட்டத்தின் துணைத் தலைவரும் ,மேனாள் இணை இயக்குனருமான  மருத்துவர் வெ.தேவராசு , கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவர் சங்கத்தின் மேனாள் தலைவர் மருத்துவர் கை.கந்தசாமி ,அரசினர் பெண்கள் மேல்நிலைப்பளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அ.தேவராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் தணிகை.ஜி.கருணாநிதி தலைமை வகித்து தலைமை உரையாற்றினார்

இந் நிகழ்வில் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் படத்தினை வழக்கறிஞர் ந.ஜெயசீலன் திறந்து வைத்து அவர் குறித்து  புகழுரையாற்றினார் .

விடுதலை வாசகர் வட்ட புரவலர்களான மருத்துவர்   தேவராசு மருத்துவர் கந்தசாமி ,ஆடிட்டர் லோகநாதன் சேகர்  ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சம்பத், தே.சதீஷ்குமா உறுப்பினர்கள் பழ.வெங்கடாசலம் ,திராவிடர்  கழக ஒன்றிய தலைவர் செ.பொன்முடி ,ஒன்றிய செயலர் செ.சிவராஜ் ஆகியோர்களுக்கு லேமினேட்  செய்யப்பட்ட  சான்றிதழ் வழங்கப்பட்டது

பெரியாரிய கொள்கை வாழ்விணையர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதன்படி மானமிகுவாளர்கள் இரா.வேங்கடம் கை சொர்ணம் வாழ்விணையர்களுக்கு பாராட்டு தெரிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப் பட்டது .விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் பழ.வெங்கடாசலம் வாழ்விணையர்களை பாராட்டி உரையாற்றினார்.

 புரட்சிக் கவிஞர் குறித்து “செந்தமிழின் நந்தவனம்” என்னும் தலைப்பில் மிக சிறப்பான உரையை முனைவர் டேவிட்சன் நிகழ்த்தினார். விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை ஜி கருணாநிதி அவருக்கு  நினைவு பரிசு வழங்கி  சிறப்பித்தார் . விடுதலை வாசகர் வட்டத்தின் செயலர் பழ.பிரபு நிகழ்வை ஒருங்கிணைத்தார்

நிறைவாக திராவிடர் கழக ஒன்றிய அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி நன்றியுரையாற்ற நிகழ்வு இனிதே நிறைவுற்றது.வருகை தந்த அனைவருக்கும்  தேநீர் ,பிஸ்கட் , மதிய உணவு வழ்ங்கப்பட்டது. இது போன்ற சிந்தனைக்கு விருந்தளிக்கும் நிகழ்வுகளை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர் 


https://photos.app.goo.gl/qpheHx68RGC26VHf7

தமிழர் கலை பண்பாட்டு புரட்சி நாள் விழா அழைப்பிதல் -April 2022