விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Friday, 13 February 2015

வாசகர் வட்டத்தில் ஆளூர் ஷாநவாஸ் உரை






வாசகர் வட்டத்தில் ஓவியர் புகழேந்தியின் உரை





வாசகர் வட்டத்தில் ஓவியர் புகழேந்தியின் உரை பகுதி --1
 
வாசகர் வட்டத்தில் ஓவியர் புகழேந்தியின் உரை பகுதி -

Tuesday, 10 February 2015

அய்ந்தாம் ஆண்டு தொடக்கவிழா கருத்தரங்கம்



     பிப்ரவரி மாதம் முழுவதும் உறுப்பினர்,புரவலர்சேர்க்கை ஆரம்பம்!                 

                வெற்றிகரமான அய்ந்தாம் ஆண்டில்
            ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்


அன்புடையீர் வணக்கம் !
நான்கு ஆண்டுகள் ,48 மாதங்களாய் இடைவெளி இல்லாமல் விடுதலை வாசகர் வட்டம் தொடர்ந்து தொய்வின்றி இயங்க ஒத்துழைப்பு தந்த வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கும் ,புரவலர் பெருமக்களுக்கும் ,கல்வி நிறுவனங்களுக்கும் ,பல்வேறு அரசியல் இயக்கங்களுக்கும், ஊற்றங்கரை நகர பொதுமக்கள் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றி !வாசகர் வட்டம் தொடர்ந்து செயல்பட உறுப்பினர் மற்றும் புரவலர்  சேர்க்கை நடைபெற்று வருகிறது .
    ஓர் ஆண்டிற்கான  உறுப்பினர் கட்டணம்  -- 100 மட்டுமே
                                         புரவலர் கட்டணம் ----2௦௦௦  மட்டுமே
உறுப்பினராக இணைத்து கொள்பவர்கள் அனைவருக்கும் வாசகர் வட்ட அழைப்பிதல் தொடர்ந்து அனுப்பி வைக்கபடும்.புரவலராக இணைத்து  கொள்பவர்கள் அனைவருக்கும் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்து சிறப்பிக்க படுவார்கள் .
  ஊற்றங்கரை நகரில் பல்வேறு கருத்துக்களை விவாதிக்கும் மேடையாய் அறிவு சார்  மக்களின் ஒன்றுகூடல் தளமாய் ,மண்ணிற்கு சிறப்பு செய்தவர்களை பாராட்டும் தாய் மடியாய் விளங்கி வரும் வாசகர் வட்டத்தில் நீங்கள் உறுப்பினர்  ஆக வேண்டாமா ?

உங்கள் நண்பர்களை ,உறவுகளை உறுப்பினராக்குங்கள்! ,புரவலர்களை அறிமுகப்படுத்துங்கள் !
தொடர்புக்கு :9865817165,9443910444,9942166695,9655266696
புரவலராக இணைத்து கொள்ள விரும்புவர்கள் pazhaprabu@gmail.com  என்கிற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் வங்கியில் நிதி அளிக்க விரும்புவர்கள் prabu .p a/c no;3030919187 ifsc code ;SBIN0007495 என்கிற பெயரில் செலுத்தலாம்

Sunday, 25 January 2015

நான்காம் ஆண்டின் நிறைவில் நெஞ்சம் நிறைந்த நன்றி !



                                                                       நன்றி !நன்றி !நன்றி !      
நான்கு ஆண்டுகள் ,48 மாதங்களாய் இடைவெளி இல்லாமல் விடுதலை வாசகர் வட்டம் தொடர்ந்து தொய்வின்றி இயங்க ஒத்துழைப்பு தந்த வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கும் ,புரவலர் பெருமக்களுக்கும் ,கல்வி நிறுவனங்களுக்கும் ,பல்வேறு அரசியல் இயக்கங்களுக்கும், ஊற்றங்கரை நகர பொதுமக்கள் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றி !வாசகர் வட்டம் தொடர்ந்து செயல்பட உங்கள் நண்பர்களை ,உறவுகளை உறுப்பினராக்குங்கள்! ,புரவலர்களை அறிமுகப்படுத்துங்கள் !
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் என்பது தந்தை பெரியார் ,பேரறிஞர் அண்ணா ,பச்சை தமிழர் காமராஜர் ,அண்ணல் அம்பேத்கார் ,டாக்டர் கலைஞர் ,தமிழர் தலைவர் வீரமணி போன்ற தலைவர்களாலும் விடுதலை  உண்மை போன்ற ஏடுகளாலாலும்  கவரப்பட்ட சிந்தனையாளர்களை உறுப்பினர்களாக உள்ள அமைப்பு .
ஜாதி ,மதம் ,அரசியல் கட்சி,ஆத்திகம் நாத்திகம்    வேறுபாடு இன்றி பலரும் இதில் உறுப்பினராக உள்ளனர் 
மாதந்தோறும் கலை,இலக்கியம் ,வரலாறு ,கல்வி,சமூகநீதி ,சட்டம் ,அறிவியல் உள்ளிட்ட தலைப்புக்களில் அறிஞர் பெருமக்களை அழைத்து கூட்டம் நடத்துவது ,சமுகத்திற்கு தொண்டாற்றிய பெருமக்களின் படத்தை திறந்து நினைவு கூர்வது ,ஊற்றங்கரை மண்ணிற்கு பெருமை சேர்த்த அழைத்து பாராட்டுவது வாசகர் வட்டத்தின் நோக்கமாகும் 

                  
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தில் நடைபெற்றுள்ள கருத்தரங்கமும் - கருத்துரையாலர்களும்

1.விடுதலை ஆசிரியர் கி.வீரமணி பிறந்தநாள் கருத்தரங்கம் -முன்னால் N .G .O சங்க தலைவர் சு.அறிவுக்கரசு
2.தமிழ் புத்தாண்டு& தமிழர் திருநாள் கருத்தரங்கம் -துரை.சந்திரசேகரன்
3.இருதய நலம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் -Dr.சிவசுப்பிரமணியம்M .D .(cardio )
4.மகளிர் தின கருத்தரங்கம் -வழக்கறிஞர் .அ.அருள்மொழி
5.தன்னம்பிக்கை பயிற்சி கருத்தரங்கம் -தன்னம்பிக்கை பயிற்சியாளர் ஜாகிர் ஹுசைன்
6.மே தின கருத்தரங்கம் – கவிஞர்.இ.சாகுல் அமீத்
7.திராவிடர் வரலாற்று ஆய்வு கருத்தரங்கம் -பெரியாரியல் பேச்சாளர் பெரியார் செல்வன்
8.காமராஜர் பிறந்த நாள் விழா –திராவிடர்கழக துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன்
9.தமிழ் இணைய பயிலரங்கம் -புதுவை பேராசிரியர் .மு.இளங்கோவன்
10.பெரியார் பிறந்த நாள் விழா -முன்னால் அமைச்சர் வ.முல்லைவேந்தன்
11.பெண்ணியம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் -பெரியார் பல்கலைகழக பதிவாளர் .பெ .மாதையன்
12.ஊடகம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் - நிழல்.திருநாவுக்கரசு
13.மூடநம்பிக்கை குறித்த சிறப்பு கருத்தரங்கம் - மருத்துவர் எழிலன்
14.மொழிப் போர் தியாகிகள் நினைவு கருத்தரங்கம் -இ .ஜி .சுகவனம் M P
15.தமிழர் தொன்மை குறித்த கருத்தரங்கம் -ஒரிசா பாலு என்கிற சிவ.பாலசுப்ரமணியம்
16.உலக மகளிர் தின விழா - கவிஞர் .ருக்மணி
17.திராவிடர் இயக்க 100 ஆம் ஆண்டு விழா கருத்தரங்கம் -நக்கீரன் துணை ஆசிரியர் கோவி .லெனின்
18.நகைச்சுவை குறித்த சிறப்பு கருத்தரங்கம் -தமிழ்நெஞ்சன்
19.வாசகர் வட்ட சிறப்பு கருத்தரங்கம் –
தமிழர் தலைவர்கி.வீரமணி
20.பச்சைத்தமிழர் காமராஜர் 110 ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா - தேசிய முரசு ஆசிரியர் கோபண்ணா
21.மனிதநேயக் கருத்தரங்கம் -பேராசிரியர் சிராஜுதீன்
22.தந்தை பெரியார் 110 ஆம் நாள் கருத்தரங்கம் -வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா
23.நெதுசு நூற்றண்டு விழா -பேராசிரியர் மங்கள முருகேசன்
24.ஜாதி ஒழிப்புக் கருத்தரங்கம் - வழக்கறிஞர் பூவை .புலிகேசி
25 மத வெறி எதிர்ப்பு கருத்தரங்கம் -முனைவர் அதிரடி.அன்பழகன் .
26.தமிழ் மொழி குறித்த கருத்தரங்கம் -சூரியன் பண்பலை தொகுப்பாளர் இ .இராஜசேகர்
27.மகளிர் எழுச்சிக் கருத்தரங்கம் -ஊடகவியலாளர் கவின்மலர்
28.புரட்சிகவிஞர் விழா -திராவிட இயக்க சொற்பொழிவாளர் இராம .அன்பழகன்
29.ஜாதி தீண்டாமை ஒழிப்பு கருத்தரங்கம் –கவிஞர்.அழகியபெரியவன்
30.டாக்டர் கலைஞர் பிறந்த நாள் கருத்தரங்கம் -எழுத்தாளர் க.திருநாவுக்கரசு
31காமராஜ் திரைப்படம் திரையிடல்
32.இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கம் - வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்
33.தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் -எழுத்தாளர் .வே.மதிமாறன்
34.திராவிடர் எழுச்சிக் கருத்தரங்கம் -பேராசிரியர் .சுப.வீரபாண்டியன்
35.கலைவாணர் என்.எஸ்.கே பிறந்தநாள் விழா கருத்தரங்கம் –கலைவாணரின் மகன் என்.எஸ்.கே.நல்லதம்பி
36. மூன்றாம் ஆண்டு நிறைவு விழா கருத்தரங்கம் –எழுத்தாளர்    அ.மார்க்ஸ்
37.நான்காம் ஆண்டு தொடக்கவிழா –திராவிடர்கழகபொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்
38.  விற்பனைவரி வருமானவரி தொழிலாளர் நலச் சட்டங்கள் குறித்த கருத்தரங்கம் –திருமிகு ஆடிட்டர்  சேதுபதி
39.  காணொளிச் சங்கமம்
40.  அம்பேத்கார் திரைப்படம் திரையிடல்
41.தமிழ்மொழி குறித்த சிறப்பு கருத்தரங்கம் –கவிஞர்அறிவுமதி
42.  பகுத்தறிவுத்திரை காணொளி தொகுப்பு
 43.பச்சை தமிழர் காமராஜர் 112 பிறந்தநாள் விழா கருத்தரங்கம் – அகில இந்திய காங்கிரெஸ் பொதுச்செயலர்-Dr.அ.செல்லக்குமார்
44..மாணவர்களுக்கான கருத்தரங்கம் -மருத்துவர் மரியானோ ஆண்டோ ப்ருனோ ,யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் கோ .கருணாநிதி
45. தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் கருத்தரங்கம் --திமுக மாநில கொள்கை பரப்பு செயலர்  திருச்சி .என்.சிவா .M.P
46.குழந்தைகளுக்கான குறும்படம் திரையிடல் 
47.இலட்சிய நடிகர் எஸ்.எஸ் .ஆர் படத்திறப்பு மற்றும் கருத்தரங்கம் -                    -சாத்தூர்      இலட்சுமண பெருமாள்
48.நான்காம் ஆண்டு நிறைவு விழா கருத்தரங்கம் --ஓவியர் புகழேந்தி

வாசகர் வட்டத்தால் பாராட்டப்பட்டவர்கள்

1 .பெரியார் பெருந்தொண்டர்கள்
2 .வித்யா மந்திர் நிறுவனர் வே.சந்திரசேகரன்
3 .பத்திரிக்கை முகவர் ரகோத்தமன்
4 .நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை புவனேஸ்வரி
5 .அரிமா .முத்து .சந்திரசேகரன் CAK பெட்ரோலியம்
6 .நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் வரதராசன்
7 .அதியமான் கல்வி நிறுவனர் திருமால் முருகன்
8 .மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன்
9 .சங்கர் IAS அகடமியின் நிறுவனர் சங்கர்
10 வித்யா மந்திர் கல்லூரியின் முதல்வர் .க.அருள்
11 தேசிய விருது பெற்ற ஒளிபதிவாளர் கோ.முரளி
12 மருத்துவர் .கொ.மாரிமுத்து
13 .கவிஞர் .சாகுல் அமீத்
14 மருத்துவர் வெ.தேவராசு
.15 .ஓடிஸா மாநில சார் ஆட்சியர் மரு.பிருந்தா
16 நகரின் மூத்த திராவிட இயக்க உறுப்பினர் வ.சாமிநாதன்
17 ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தலைவர் மாரிசெட்டி
18 வடஅமரிக்க தமிழ்சங்கத் தலைவர் தண்டபானிகுப்புசாமி
19 நரிக்குறவர் இனத்திலிருந்து மருத்துவம் பயில தேந்தெடுக்கப் பட்ட முதல் மாணவர் ராஜ பாண்டி
20 உலக தமிழ்க் கவிஞர் பேரவையின் அமைப்பாளர் .கவி .செங்குட்டுவன்
21 நல்லாசிரியர் விருது பெற்ற மு.இந்திராகாந்தி
 22 நல்லாசிரியர் விருது பெற்ற பெ.ராசேந்திரன்
23சாதி மறுப்பு மணம் செய்து கொண்ட தம்பதியினர்
24.வரதராசுலு ஆசிரியர்
25.தமிழுக்கு தொண்டாற்றி பணி நிறைவு செய்த தமிழாசிரியர்கள்
26.ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம்
27..மூத்ததிராவிட இயக்க உறுப்பினர் மயிலேரி.கா .சண்முகம்
28.கணினி நூலக புரவலர் வே.செல்வராஜ்
வாசகர் வட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட படங்கள்
1.தந்தை பெரியார்
2.புரட்சிகவிஞர் பாரதிதாசன்
3.பேரறிஞர் அண்ணா
4.அன்னை மணியம்மையார்
5.அண்ணல் அம்பேத்கார்
6.சேகுவேரா
7.சுயமரியாதை சுடரொளிகள்
8.பச்சைத் தமிழன் காமராசர்
9.நடிகவேள் எம்.ஆர் .இராதா
10.இராமலிங்க அடிகளார்
11.கலைவாணர் .என்.எஸ் .கே
12.சமூகநீதி காவலர் விபிசிங்
13 மொழிபோர்த்தியாகிகள்
14 விஞ்ஞானி ஜி .டி.நாயுடு
15.திராவிட இயக்க வீராங்கனைகள்
16.டாக்டர் சி.நடேசனார்
17.டி .எ .மதுரம்
18.தவத்திரு குன்றக்குடி அடிகளார்
19.மறைமலை அடிகள்
20 திரு .வி.க\
21.இரட்டைமலை சீனிவாசன்
22.கல்வியாளர் நெ.து .சு
23.கி ஆ பெ விசுவநாதன்
24 .மொழி ஞாயிறு தேவநேய பாவாணர்
25.தோழர் ஜீவானந்தம்
26.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
27.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
28.அயோத்திதாச பண்டிதர்
29.டி .என் ராஜரத்தினம் பிள்ளை
30.பன்மொழிப் புலவர் அப்பாதுரையார்
31.டாக்டர் ஆபிரகாம் கோவூர்
32.டாக்டர் நரேந்திர தபோல்கர்
33.இன உரிமை போராளி நெல்சன் மண்டேலா
34.பகுத்தறிவு கலைஞர் காகா இராதாகிருஷ்ணன்
35.இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்
36. திராவிடர் மொழியியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்  
37.தியாகசீலர் கக்கன்
38.கன்னட எழுத்தாளர் யு.ஆர் .அனந்தமூர்த்தி
39.இலட்சிய நடிகர் எஸ்.எஸ் .ஆர்
40.திராவிட இயக்க ஆய்வாளர் .எம்.எஸ் .எஸ் .பாண்டியன்
வாசகர் வட்டத்தில் கருத்துரையாற்ற அளிக்கப்பட்ட தலைப்புகள்
1.தமிழர் வாழ்வில் விடுதலை
2.நற்றமிழர் வாழ்வில் தை திங்களும் தமிழ் புத்தாண்டும்
3.இதயம் காப்போம்
4.பெண்ணியம் வென்றதும் வெல்லவெண்டியதும்
5.நம்மால் முடியும்
6.விடுதலை வரலாற்றில் சில பக்கங்கள்
7.திராவிடர் இயக்கத்தின் நோக்கமும் தாக்கமும்
8.பெரியாரும் காமராஜரும்
9.இணையம் கற்போம்
10.பெரியாரின் தேவை
11.பெரியாரும் பெண் விடுதலையும்
12.ஊடகங்களை புரிந்து கொள்வோம்
13.தமிழ்நாடும் மூடநம்பிக்கையும்
14.தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
15.தமிழின் தொன்மையும் பெருமையும்
16.தந்தையே தா உன் கைத்தடி
17.திராவிட இயக்கம் சொன்னதை செய்தது  செய்ததை சொன்னதா ?
18 சிரிக்கத்தானே இந்த நேரம்
19.சமத்துவ சிந்தனைகள்
20.பெரியாரும் பெருந்தலைவரும்
21.யார் மனிதன்
22.பெரியார் எனும் உயிராயுதம்
23.கல்விப் பணியில் நெதுசுவும் பகுத்தறிவும்
24.ஜாதி என்னும் சதி
25 மதம் மனிதம் மகாத்மா
26 தமிழ் இலக்கியங்களும் அறியப்படாத செய்திகளும்
27.''ஊடகங்களில் வர்ண பேதமும் பாலியலில் வர்க்க பேதமும் ''
28 பெரியார் வழியில் பாரதிதாசன்
29.பெரியார் அம்பேத்கார் கொள்கைகளில் ஜாதி ஒழிப்பு
30.மானமிகு சுயமரியாதை
31.தி கிங் மேக்கர் காமராஜ்
32.'அழிந்து வரும் இயற்கை விவசாயமும் தலைகுனியும் நவீன விவசாயமும் '
33.பெரியார் எதிர்ப்பும் பெரியார் மறுப்பும் ஜாதி வெறியே
34.திராவிட இயக்க எதிர்ப்பாளர்களும் நம் கடமையும்
35.என் தந்தை கலைவாணர்
36. தமிழும் திராவிடமும்
37.ஆப்ரிக்காவில் பெரியார்
38.தமிழ் =உயிர்நேயம்
39.காலத்தை வென்ற காமராஜர்
40.மருத்துவம் எதிர்நோக்கும் சவால்களும் மாணவர்களின் கடமையும்
41.கல்வி -வேலைவாய்ப்பு -சமூகநீதி
42.தென்றலும் புயலும்
43.அறிவுக்கதவை சரியாய் திறந்தால்
44.எரியும் வண்ணங்கள் உறங்கா உண்மைகள்


48ஆம் மாத நிகழ்வு அழைப்பிதழ்



















 திருமணக்கூடத்தில் காலை1௦மணியளவில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்குவாசகர்வட்டபொருளாளர்ஆடிட்டர்.ராஜேந்திரன்  வரவேற்புரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஆசிரியர் இர.பழனி விழா அறிமுக உரையை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு. திருவனப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவரும் மாவட்ட திமுக இளைஞரணி பொறுப்பாளர் ரஜினி செல்வம் தலைமை வகித்தார் கலையாசிரியர் கவிஞர் .சாகுல் அமீத் ,கலையாசிரியர் சு.செந்தில்குமார் ,  திராவிடர் கழக மண்டல செயலாளரும் வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம்திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாவட்ட அமைப்பாளரும் வாசகர் வட்ட தலைவருமான தணிகை ஜி கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.திராவிட இயக்க ஆய்வாளர் எம்.எஸ் எஸ் பாண்டியன்படத்தினை பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் அண்ணா.சரவணன் திறந்து வைத்து சிறப்பான நினைவேந்தல் உரையாற்றினார்
வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு வெ.அன்புச்செல்வன், விடுதலை சிறுத்தைகளின் ஒன்றிய பொறுப்பாளர் துரை.வளவன் ,புலவர் .அண்ணாமலை ஆகியோர் நூல்களை  அளித்து சிறப்பு செய்தனர். சிறப்புரையாற்ற வந்த ஓவியர் ஓவியர் புகழேந்தியின் ''சிதைந்த கூடு ''நூலினை  மேனாள் தலைமை ஆசிரியர் எஸ்.ஏ.காந்தன் வெளியிட கலையாசிரியர் கவிஞர் சாகுல் அமீத், கலையாசிரியர் செந்தில்குமார் ,பெற்றுகொண்டார். ஓவியர் புகழேந்தி குறித்த இயக்குனர் மகேந்திரன் மேற்பார்வையில் ஜான் இயக்கிய ஆவணப்படத்தை மருத்துவர் பத்மனாபன் வெளியிட திராவிடர் கழக மகளிரணி செயலர் கவிதா அவர்கள் பெற்றுகொண்டார்..சிறப்பு விருந்தினரை திராவிடர் கழக மாவட்ட செயலர் வி.ஜி.இளங்கோ அறிமுகம் செய்து வைக்க ‘’எரியும் வண்ணங்கள் உறங்கா உண்மைகள் ‘’என்னும் தலைப்பில் மிகச் சிறப்பான கருத்துரையை ஓவியர்புகழேந்தி வழங்கினார்
நிறைவாக வாசகர் வட்ட துணைத்தலைவர் இர.வேங்கடம் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியினை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு தொகுத்து வழங்கினார். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் அறிவாசான் தந்தை பெரியார் எழுதிய குறிப்புக்களும் ,புத்தாண்டு வாழ்த்து செய்தியும் தரப்பட்டன .அனைவருக்கும் இரவு உணவு தரப்பட இது போன்ற நிகழ்வுகள்  வாசகர் வட்டத்தின் சார்பில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என வருகை தந்திருந்த அனைவரும் வலியுறுத்தினர்