விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Monday, 26 December 2022

கொள்கை பாசறையாக நடைபெற்ற ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட கூட்டம் !

கடந்த 25 .09.2022 ஞாயிற்றுக்கிழமை ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் செப்டெம்பர் மாத கூட்டம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, மற்றும் புலவர் மா. நன்னன் நூற்றாண்டு தொடக்க விழாவாக மிக சிறப்புடனும் எழுச்சியுடனும் நடைபெற்றது


விழாவில் தொடக்கமாக பங்கேற்ற அனைவரையும் ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி தலைவர் மானமிகு கோ. சரவணன் அவர்கள் வரவேற்று உரையாற்றினார்


எம்.ஜி ஆர் நூற்றாண்டு அறக்கட்டளையின் உறுப்பினர் இல.ராஜ்கணேஷ் .அரசு பள்ளிகள் வளர்ச்சி அறக்கட்டளையின் செயலர் தே.சதீஷ்பாபு , திமுக கிளை செயலர் இர.பா.பார்த்தீபன் என்கிற தீபக் ,ஊற்றங்கரை நகர திமுக அவைத்தலைவர் தணிகை குமரன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர் .


ஊற்றங்கரை பகுதியில் விடுதலை சந்தா சேர்ப்பில் அயராது பாடுபட்டு ஊற்றங்கரை ஒன்றியம் சார்பில் முதல் தவணையாக 200 சந்தாக்களை திரட்டி வழங்கிய ஒன்றிய திராவிடர் கழக தலைவர் மானமிகு செ. பொன்முடி, ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் மானமிகு செ.சிவராஜ், மானமிகு சீனி முத்து. ராஜேசன் , ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி தலைவர் சரவணன் ஆகியோருக்கு மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள் சிறப்பு செய்தார். திராவிடர் கழகத்தில் புதியதாக இணைத்து கொண்ட தோழர்களுக்கு வரவேற்று பயனாடை அணிவிக்கப்பட்டது . சிங்காரப்பேட்டை கால்நடை மருத்துவமனைக்கு விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தந்தை பெரியார் படம் வழங்கப்பட்டது. கால்நடை மருத்துவர் பா.பாசில் அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்விற்கு தலைமை தாங்கிய ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் தணிகை ஜி கருணாநிதி அவர்கள் தலைமை உரையாற்றினார்


தமிழ் அறிஞரும் பெரியார் பெரியார் பேருரையாளருமான புலவர் மா.நன்னன் அவர்களின் படத்தை திமுக மாவட்ட துணை செயலாளர் திருமிகு எம்.சந்திரன் அவர்கள் திறந்து வைத்து புலவர் மா.நன்னன் அவர்களை பற்றிய அரிய செய்திகளை எடுத்துரைத்தார்.


அதை தொடர்ந்து உயிராயுதம் தந்த பேராயுதம் எனும் தலைப்பில் திராவிடர் கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.


இந் நிகழ்ச்சியினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் மானமிகு.பழ.பிரபு அவர்கள் ஒருங்கிணைக்க ஒன்றிய திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளர் மானமிகு தா.சிவகுமார் அவர்கள் நன்றியுரை கூறினார்


இந் நிகழ்வில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி , திமுக மாவட்ட துணை செயலாளர் திருமிகு எம்.சந்திரன் ஆகியோர் அரையாண்டு விடுதலை சந்தா வழங்கினார். ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க பொறுப்பாளர் இராமசாமி அவர்கள் மாடர்ன் ரேஷனலிஸ்ட் இதழுக்கு சந்தா அவர்கள் அரையாண்டு வழங்கினார்







வருகை தந்த அனைவருக்கும் அறிவாசான் தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி சிறப்பான மதிய விருந்து வழங்கப்பட்டது . கொள்கை பாசறை வகுப்பு போல நடைபெற்ற கூட்டம் தொடர்ந்து வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்திட வேண்டும் என பலரும் வேண்டுகோள் விடுத்தனர்

No comments:

Post a Comment