தமிழர் தலைவர் பாராட்டி சிறப்புரை
மிகச் சிறப்புடன் நடைபெற்ற முனைவர் .தண்டபாணி குப்புசாமி பாராட்டு விழா மற்றும் கருத்தரங்கம்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 19 ஆம் நிகழ்வாக வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் தலைவர் .முனைவர் .தண்டபாணி குப்புசாமி அவர்களுக்கு பாராட்டு விழாவும் சிறப்பு கருத்தரங்கமும் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் நாள் சனிக்கிழமை காலை 10 மணி அளவில் ஊற்றங்கரை திருமண கூடத்தில் நடைப்பெற்றது ,தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்
முன்னதாக மாநில பக துணைத் தலைவர் அண்ணா .சரவணன் விடுதலை நாளிதழ் குறித்த பாடலை பாடி நிகழ்ச்சியினை துவக்கினார் . திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளரும் வாசகர் வட்ட தலைவருமான தணிகை .ஜி .கருணாநிதி அவர்கள் விடுதலை வைப்பு நிதியாக ருபாய் 25000 அளிப்பதாக அறிவித்து முதல் தவணையாக ருபாய் 1000 அளித்து வரவேற்புரை ஆற்றினார் .வாசகர் வட்ட பொருளாளர் அண்ணா .அப்பாசாமி அவர்கள் தனது சீன வெளிநாட்டு பயணத்தின் போது விடுதலை வாசகர் வட்ட செயல்பாட்டிற்காக வாங்கிய ஒலிபெருக்கியினை தமிழர் தலைவர் முன்னிலையில் வாசகர் வட்ட தலைவர் தணிகை .கருணாநிதியிடம் அளித்து மாத அறிக்கை வாசித்தார் .திராவிடர் கழகத்தின் மண்டலசெயலாளரும் வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் அவர்கள் தனது பிறந்த நாளை ஒட்டி தமிழர் தலைவரிடம் விடுதலை வைப்பு நிதியாக ருபாய் 1000 வழங்கி விழா அறிமுக உரை ஆற்றினார்
இந்த நிகழ்ச்சிக்கு .ஊற்றங்கரை பேருராட்சி தலைவர் சு.பூபதி அவர்களும் ,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் மேனாள் ஊற்றங்கரை ஒன்றிய திமுக பொறுப்பாளருமான வ .சுவாமிநாதன் அவர்களும் ,ஊற்றங்கரை இந்திய மருத்துவ சங்கத் தலைவருமான வெ.தேவராசு அவர்களும் ,காமராஜ் அறக்கட்டளையின் தலைவர் டி.எஸ்.திருநாதன் அவர்களும் ,திராவிடர் மகளிர் பாசறையின் பொருளர் எ.அகிலா அவர்களும்,திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் வி.ஜி.இளங்கோ அவர்களும் கலந்து கொண்டு முன்னிலை வகித்து உரையாற்றினர்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் படத்தினை அதியமான் கல்வி நிறுவனகளின் நிறுவனர் சீ.திருமால் முருகன் திறந்து வைத்து விடுதலை வைப்பு நிதியாக ருபாய் 10000 த்தை அளித்து விடுதலை வாசகர் வட்ட செயல்பாடுகள் குறித்து பாராட்டி உரையாற்றினார் .வருகை புரிந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள் நூல் நினைவு பரிசாக வழங்கப் பட்டது ஊற்றங்கரை பேருராட்சி தலைவர் சு.பூபதி அவர்களுக்கு தமிழ்ச் சங்க பொருளாளர் இர.பழனி அவர்களும் ,தலைமை தாங்கிய அந்தோனியார் ஆர்.சி.சர்ச்சின் அருட்தந்தை அ.ஜோசப் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட துணைச் செயலாளர் சா.அசோகன் அவர்களும் மேனாள் ஊற்றங்கரை ஒன்றிய திமுக பொறுப்பாளர் வ .சுவாமிநாதன் அவர்களுக்கு திரிணாமுல் காங்கிரெஸ் மாவட்ட தலைவர் க.அசோக் அவர்களும் ஊற்றங்கரை இந்திய மருத்துவ சங்கத் தலைவருமான வெ.தேவராசு அவர்களுக்கு தமிழ்ச் சங்க தலைவர் கீ .ஆ .கோபாலன் அவர்களும் காமராஜ் அறக்கட்டளையின் தலைவர் டி.எஸ்.திருநாதன் அவர்களுக்கு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயலாளர் இரா .வேங்கடம் அவர்களும் திராவிடர் மகளிர் பாசறையின் பொருளர் எ.அகிலா அவர்களுக்கு பெரியார் வீர விளையாட்டுக் கழக செயற்குழு உறுப்பினர் அழகுமணி அவர்களும் அதியமான் கல்வி நிறுவனகளின் நிறுவனர் சீ.திருமால் முருகன் அவர்களுக்கு ஒன்றிய திமுக செயலாளர் எக்கூர் செல்வம் அவர்களும் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் வி.ஜி.இளங்கோ அவர்களுக்கு நகர திமுக செயலாளர் பாபு சிவக்குமார் அவர்களும் நினைவுப் பரிசு வழங்கினர்
விடுதலை சந்தா
ஊற்றங்கரை இந்திய மருத்துவ சங்கத் தலைவர் வெ.தேவராசு அவர்களின் மகன் மருத்துவர் கவின் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்ததின் மகிழ்வாக தமிழர் தலைவரிடம் ருபாய் 500 வழங்கினார் .விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட துணைச் செயலாளரும் நொச்சிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவருமான சா.அசோகன் விடுதலைக்கு ஆயுள் சந்தா அளிப்பதாக உறுதி அளித்து முதல் தவணையாக ருபாய் 2500 அளித்தார்
மருந்து பொருட்கள் அன்பளிப்பு
விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் ஒவ்வொரு மாதமும் மருத்துவர்களுக்கு அளிக்கப்படும் சாம்பிள் மருந்துகள் சேகரிக்கப்பட்டு பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபடுகிறது .இம் மாதம் சேகரிக்கப் பட்ட மருந்து பொருட்களை ஊற்றங்கரை மண்டல மருந்து வியாபாரிகள் சங்க பொருளாளர் செந்தாமரைசெல்வன் அவர்களும் ஊற்றங்கரை நகர மருந்து வியாபாரிகள் சங்க பொருளாளர் இர.திருநாவுக்கரசு அவர்களும் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார்
வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் தலைவர் .முனைவர் .தண்டபாணி குப்புசாமி அவர்களின் தன் விவரக் குறிப்பினை ஒய்வு பெற்ற ஆசிரியர் செண்பகவல்லி வாசித்தார் . முனைவர் தண்டபாணி அவர்களை பாராட்டி கவிஞர் சாகுல் அமீத் கவிதை வாசித்தார் .திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் முனைவர் தண்டபாணி அவர்களுக்கும் அவரது வாழ்விணையர் வளர்மதி அவர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டி விடுதலை வாசகர் வட்டத்தின் நினைவு பரிசு வழங்கினார் .முனைவர் தண்டபாணி அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்
80 ஆம் பிறந்தநாள்
விரைவில் தனது 80 ஆம் பிறந்த நாளை கொண்டாடவிருக்கும் கிருட்டிணகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் தா .திருப்பதி அவர்களை வாழ்த்தி அவருக்கு திராவிடர் கழகம் சார்பிலும் ,விடுதலை வாசகர் வட்டம் சார்பிலும் தமிழர் தலைவர் அவர்கள் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார் .அந்தோணியார் ஆர்.சி .சர்ச்சின் அருட்தந்தை அ.ஜோசப் அவர்கள் தலைமை உரை ஆற்றினார்
.நிறைவாக சமத்துவ சிந்தனைகள் என்னும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவரும் தமிழர் தலைவருமான ஆசிரியர் வீரமணி அவர்கள் கருத்துரை ஆற்றினார் தமிழர் தலைவர் அவர்களுக்கு ஊற்றங்கரை பேரூராட்சியின் தலைவர் சு.பூபதி நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார் .வாசகர் வட்டத்தின் துணைச் செயலாளர் ஆடிட்டர் ராசேந்திரன் நன்றி உரை ஆற்றினார் .வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு விழாவை ஒருங்கிணைத்தார்
இந்த நிகழ்வில் திராவிட கழக சட்ட துறை செயலாளர் வீரசேகரன் ,தலைமை செயற்குழு உறுப்பினர் க.பார்வதி , தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன் ,மண்டல செயலாளர் தியாகராசன் ,பக தலைவர் ஊமை.ஜெயராமன் ,மாநில பக பொறுப்பாளர் தமிழ்செல்வி ,வித்யா மந்திர் கல்வி நிறுவங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன் ,முன்னால் பேரூராட்சி தலைவரும் விடுதலைசிறுத்தைகளின் மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் ஜெயலட்சுமி , விடுதலை சிறுத்தைகளின் ,ஒன்றியசெயலாளர் நாசி.சரவணன் ,மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் வே .கிருட்டினமூர்த்தி ,மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் கோவிந்தசாமி ,அரிமா சங்க பொறுப்பாளர் முத்து ,சந்திரசேகரன் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னுசாமி , ஓட்டல் சங்கத் தலைவர் அரிமா . ராஜா ,உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள் ,கழகத் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்
அரங்கத்தின் நுழைவு வாயிலில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் பிஸ்கட் ,குர்குரே ,குறிப்பேடு ,எழுதுகோல் ,நிகழ்ச்சின் இடையில் தேநீர் ,இறுதியில் மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது ,.இதுவரை வாசகர் வட்டத்தால் பாராட்டப் பட்ட பிரமுகர்களுடன் தமிழர் தலைவர் மதிய உணவு அருந்தி ஊற்றங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பழைய மாணவர்களால் அமைக்கப் பட்டுள்ள கணினி நூலகத்தை பார்வையிட்டார் ,இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி நடத்த வேண்டும் என வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர்
No comments:
Post a Comment