விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Thursday, 6 November 2014

''தென்றலும் புயலும் '' வாசகர் வட்ட 45 ஆம் நிகழ்வு



















































































ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின்  45 ஆம் நிகழ்வான தந்தை பெரியார்  பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா கருத்தரங்கம்  ஊற்றங்கரை திருமணக் கூடத்தில் மாலை 5மணியளவில் நடைப்பெற்றது .முன்னதாக  ஊரெங்கும் கொடிகளும் பாதாகைகளும்  மின்விளக்குகளும் அலங்கரிக்கப்பட்ட இந்த நிகழ்சிக்கு நக்கீரன் தயாரிப்பில் கோவி .லெனின் இயக்கிய ''அண்ணா -பெருங்கடலில் இருந்து சில துளிகள் " என்கிற ஆவணப் படம் திரையிடப்பட்டது 
 இந் நிகழ்ச்சிக்கு  திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாவட்ட அமைப்பாளரும் வாசகர் வட்ட தலைவருமான தணிகை ஜி கருணாநிதி வரவேற்புரையாற்றினார்.,ஊற்றங்கரை  திமுக நகர செயலரும் வாசகர் வட்ட புரவலருமான இர .பாபு சிவக்குமார் விழா அறிமுக உரையை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட செயலர் டி.செங்குட்டுவன்  தலைமை வகித்து உரையாற்றினார்.திமுக ஒன்றிய செயலரும் வாசகர் வட்ட புரவலருமான  எக்கூர் த.செல்வம் , திராவிடர் கழக மாவட்ட  செயலாளர் வி ஜி  இளங்கோ  , ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.இந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் ,தமிழ் எழுத்தர் பேரவையின் மாவட்ட செயலர் ,சீன வானொலி நேயர் மன்றத்தின் மாவட்ட தலைவர் ,உலக தமிழ் கவிஞர் பேரவையின் அமைப்பாளர்  தமிழ் முற்போக்கு எழுத்தர் சங்கத்தின் துணை செயலர் போன்ற பல்வேறு பொறுப்புக்களில் திறம்பட பணியாற்றிவரும் வாசகர் வட்ட உறுப்பினர் கவி .செங்குட்டுவன் (எ )இராசேந்திரன் அவர்களை பாராட்டி கருத்துரை ஆற்ற வருகை தந்த  திமுக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி .என் .சிவா அவர்கள்  பாராட்டி தமிழர் தலைவர் எழுதிய ''வாழ்வியல் சிந்தனைகள் '' என்கிற நூலினை பரிசளித்தார் 
                            வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு  மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் மருத்துவர் காஞ்சனா கமலநாதன் , மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் கே .ஆர் .கே .நரசிம்மன் .விடுதலை சிறுத்தைகளின் ஒன்றிய செயலாளர் நாசி .சரவணன் ,திமுக நகர அவைத்தலைவர் பா .அமானுல்லா ,திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர்  கவிதா  இளங்கோ, இந்திய மருத்துவ சங்க பொறுப்பாளர்  மருத்துவர்  வெ.தேவராசன் ஆகியோர் நூல்களை அளித்து சிறப்பு செய்தனர். 
                                  திராவிடர் கழக மண்டல செயலாளரும் வாசகர் வட்ட அமைப்பாளருமான பழ .வெங்கடாசலம் வருகை தந்த சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுக உரை ஆற்றிட ,திமுக கொள்கை  பரப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி .என் .சிவா அவர்கள் கன்னட எழுத்தாளாரும் மதவெறிக்கு எதிராக தன் வாழ்நாள் எல்லாம் போராடிய யு.ஆர் அனந்தமூர்த்தி அவர்களின் படத்தினை திறந்து வைத்து ''தென்றலும் புயலும் ''என்கிற தலைப்பில்  ,பின்னர் உணர்ச்சி பிழம்பாய் தன் உணர்வுகளை மடை திறந்த வெள்ளம் போல்  மிக சிறப்பான கருத்துரையை  வருகை தந்த பார்வையாளர்கள் ரசிக்கும் வண்ணம் உரையாற்றினார்.
                         நிறைவாக வாசகர் வட்ட பொருளாளர் ஆடிட்டர் .இராசேந்திரன் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியினை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு தொகுத்து வழங்கினார்.​நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் திருச்சி .என் .சிவா அவர்கள் எழதிய ''பேச்சை தொழிலாக கொண்டவன் சொல்கிறேன் மனைவியிடம் பேசுங்கள் " என்கிற கட்டுரையும் பேரறிஞர் அண்ணா அவர்கள் ,யு .ஆர் .அனந்தமூர்த்தி  குறித்த குறிப்புக்களும் தரப்பட்டன .அனைவருக்கும் இரவு உணவு தரப்பட இது போன்ற  நிகழ்வுகள்  வாசகர் வட்டத்தின் சார்பில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என வருகை தந்திருந்த அனைவரும் வலியுறுத்தினர்

No comments:

Post a Comment