இந்நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட செயலர் டி.செங்குட்டுவன் தலைமை வகித்து உரையாற்றினார்.திமுக ஒன்றிய செயலரும் வாசகர் வட்ட புரவலருமான எக்கூர் த.செல்வம் , திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வி ஜி இளங்கோ , ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.இந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் ,தமிழ் எழுத்தர் பேரவையின் மாவட்ட செயலர் ,சீன வானொலி நேயர் மன்றத்தின் மாவட்ட தலைவர் ,உலக தமிழ் கவிஞர் பேரவையின் அமைப்பாளர் தமிழ் முற்போக்கு எழுத்தர் சங்கத்தின் துணை செயலர் போன்ற பல்வேறு பொறுப்புக்களில் திறம்பட பணியாற்றிவரும் வாசகர் வட்ட உறுப்பினர் கவி .செங்குட்டுவன் (எ )இராசேந்திரன் அவர்களை பாராட்டி கருத்துரை ஆற்ற வருகை தந்த திமுக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி .என் .சிவா அவர்கள் பாராட்டி தமிழர் தலைவர் எழுதிய ''வாழ்வியல் சிந்தனைகள் '' என்கிற நூலினை பரிசளித்தார்
வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் மருத்துவர் காஞ்சனா கமலநாதன் , மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் கே .ஆர் .கே .நரசிம்மன் .விடுதலை சிறுத்தைகளின் ஒன்றிய செயலாளர் நாசி .சரவணன் ,திமுக நகர அவைத்தலைவர் பா .அமானுல்லா ,திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா இளங்கோ, இந்திய மருத்துவ சங்க பொறுப்பாளர் மருத்துவர் வெ.தேவராசன் ஆகியோர் நூல்களை அளித்து சிறப்பு செய்தனர்.
நிறைவாக வாசகர் வட்ட பொருளாளர் ஆடிட்டர் .இராசேந்திரன் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியினை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு தொகுத்து வழங்கினார்.நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் திருச்சி .என் .சிவா அவர்கள் எழதிய ''பேச்சை தொழிலாக கொண்டவன் சொல்கிறேன் மனைவியிடம் பேசுங்கள் " என்கிற கட்டுரையும் பேரறிஞர் அண்ணா அவர்கள் ,யு .ஆர் .அனந்தமூர்த்தி குறித்த குறிப்புக்களும் தரப்பட்டன .அனைவருக்கும் இரவு உணவு தரப்பட இது போன்ற நிகழ்வுகள் வாசகர் வட்டத்தின் சார்பில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என வருகை தந்திருந்த அனைவரும் வலியுறுத்தினர்
No comments:
Post a Comment