ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் 24/12/2022 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வெகு சிறப்புடன் நடைபெற்றது
சோதனை கொள்முதல் (Test Purchase) சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் வணிகவரித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ,தொழில் வளர்ச்சி வணிகர் நலன் மற்றும் வழிகாட்டல் குறித்த வல்லுனர்கள்
தணிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு கருத்தரங்கத்தை ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் நடத்தப்பட்டது
நிகழ்வின் தொடக்கமாக திராவிட இயக்க தலைவர்களான தந்தை பெரியார் வள்ளல் எம்.ஜி.ஆர் படங்களை அவர்களின் நினைவு நாளையொட்டி விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் தணிகை.ஜி.கருணாநிதி அவர்களும் திராவிடர் கழக தலைமை கழக சொற்பொழிவாளர் பழ.வெங்கடாசலம் அவர்களும் திறந்து வைத்து மரியாதை செய்தனர். நிகழ்வை ஆடிட்டர். CA ஜெய்சுதா லோகாதன் அவர்கள் வரவேற்புரையாற்றி தொடங்கி வைத்தார
விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளர் ஆடிட்டர் ந.இராசேந்திரன் அவர்கள் விழா அறிமுக உரையாற்ற விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் தணிகை.ஜி.கருணாநிதி அவர்கள் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார்
ஆடிட்டர் .ஜி . சத்யமூர்த்தி அவர்களும் ஆடிட்டர் .CA.வடிவேல் அவர்களும் விழாவினை தொடங்கி வைத்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் வணிகவரித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விரிவாக விளக்கினார் . பவர் பாயிண்ட் மூலம் சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் வணிக வழிகாட்டலை வணிகர்கள் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வண்ணம் ஆடிட்டர் CMAலோகநாதன் சேகர் எடுத்துரைத்தார்
கிருட்டிணகிரி பகுதியை சார்ந்த ஆடிட்டர் . B.H.லியாகத் அலி ஆடிட்டர் . P.ஹரிஹரன் ஆடிட்டர் . M.ஷபீர் உசேன் ஒசூர் பகுதியை சார்ந்த ஆடிட்டர் . S.திலகவதி ஆடிட்டர் . C.தீபா தருமபுரி பகுதியை சார்ந்த ஆடிட்டர் . V.அருள் தருமபுரி பகுதியை சார்ந்த ஆடிட்டர் . S.ராமச்சந்திரன் ஆடிட்டர் . வேலாயுதம் ஆடிட்டர் ஜெயசீலன் ஆகியோர் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கருத்துரை வழ்ங்கி வணிகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்
விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு அவர்கள் விழாவினை ஒருங்கிணைக்க திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் செ.சிவராஜ் அவர்கள் நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவு பெற்றது . வருகை தந்த அனைவருக்கும் இரவு விருந்து அளிக்கப்பட்டது. இது போன்ற விழிப்புணர்வு நிகழ்வை தொடர்ந்து நடத்திட வேண்டுகோள் விடுத்தனர்